
இயற்கை அன்னை விரித்து வைத்த புல்வெளி
பச்சை கம்பளமாய் பாதங்களுக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க.
சொர்கம் சொக்கிப் போகும்
கொஞ்சம் இளைப்பாற இடம் கேட்க்கும்
அழகுக்கு நாங்கள் அஸ்திவாரம் இப்படி கர்வமாக நிமிர்ந்திருந்த
பூக்காட்டுக்குள் மொனத்தை மொழியாக்கி நடந்து சென்றோம்..
முத்துச் சிப்பிக்குளிருந்து முத்துக்கள் சிரித்தது சின்னதாக.
ஆம் - அவள் சின்னதாக புன்னகைத்து கூறினாள்
அங்கே அமரலாம்.
யாரோ ஒரு கலைஞ்னின் கவித்துவமான படைப்பில்
உருவாகி இருந்தது அந்த சிறிய நீரூற்று.
வெள்ளை தாவணி போர்த்திக் கொண்டு
அழகாக நீராடிக் கொண்டிருந்தது அந்த நீரோடை
பொன்னிறமான இளவம்பஞ்சு பாதங்களை
நீரோடை முத்தமிட அமர்ந்தாள் - அருகில் நானும்
அழகாக ரசித்துக்கொண்டிருந்தது அந்த நிலவு - நீரோடையை.
ஆம் அவள்தான் - நானும் ரசித்துக்கொண்டிருந்தேன்
என்னவளை - ஆம் நிலவை.
சற்று முகம் திருப்பி புன்னகைத்து கேட்டாள் "என்ன?"
உதடுகள் பிரியாமல் கண்களால் கேட்ட கேள்விக்கு - பதில்
உதடுகள் பிரித்து நான் மட்டும் முத்தமிடும் இப்பாதங்களை
நீரோடை முத்தமிடுகிறது, பூக்கள் அனைத்தும் உன் அழகை தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருந்ததால் இன்று முதல் எதிரியாகி விட்டார்கள்
என்று சொல்ல நினைத்து ஒன்றும் சொல்லாமல்
கண்களால் பதில் கூறினேன் - ஒன்றும் இல்லை.
ஆர்பாட்டம் இல்லாமல் அழகாக ஓடும் ஓடை
சுதந்திரம் எங்களுக்கு மட்டுமே சொந்தம்
என்று சொல்லித் திரியும் மீன் கூட்டங்கள்.
ஜதி போட தெரியும் என்று
சலசலத்து ஓடும் தண்ணீர்
இயற்கை தீட்டிய உயிர் கொண்ட ஓவியமாய்
தென்றலின் தாலாட்டுக்கு தகதிமியாடும்
வண்ணமிகு மலர்த்தோட்டம்
இயற்கை தேவனை ஆசானாக கொண்டு
கற்றுக் கொண்ட பாடலை
மரங்களின் சலசலப்பு பக்கவாத்தியங்கள் முழங்க
மெய்மறந்து பாடிக்கொண்டிருக்கும் குயில்.
இப்படியே சொல்லிக் கொண்டே சென்றவள்
உனக்கு பிடித்திருகிறதா என்றாள்
மெதுவாக அவள் கண்ணங்களை தொட்டு திருப்பினேன்
இவைகளில் ஒன்றைகூட என் மனம் ரசிக்க மறுக்கிறது
இவை அனைத்திற்கும் குத்தகை எடுத்தாற்போல்
நீ என் அருகில் இருக்கும்போது உன்னையன்றி
நான் எவற்றை ரசிக்க மனம் கொடுப்பேன்.
காலைப் பனித்துளி காய்ச்சல் கொண்டு வழிவதுபோல
அவள் ஊதாப்பூ கண்களில் இருந்து கண்ணீர்
கொப்பளித்து வழிந்தது.
கண்ணீர் சிந்திய முத்துக்களை கையேந்தி கைப்பற்ற
என் இதயத்தில் எரிமலை எரிச்சல் - கண்ணீர் வெப்பம் தாங்காமல்
அவள் தேன்குரல் தழுதழுத்து தடங்கலாய் கூறியது
எனக்கு என் காதலை ஆசையை அன்பை
சொல்லத் தெரியவில்லை என்று.
சொன்னபடியே தன் பிஞ்சு விரல்களால் என் கரங்களை பற்றி
என் கண்ணீர் துளிகளை கேட்டுப்பார் அது சொல்லும் என் காதலை அன்பை
என்றபடி கரங்களுக்கிடையே முகம் புதைந்தாள்
வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தேன் கண்ணீர் துடைக்க
மௌனம் இதையன்றி வேறொன்றும் தோன்றவில்லை
நிமிடங்கள் நிசப்தமாய் கரைய
மெதுவாக என் பௌர்ணமி நிலா முகம் காட்டியது
வேறொன்றும் பேசாமல் புன்னகைத்தேன்
என் புன்னகை பிறவிப்பயன் பெற்றது
ஆம் - அவளும் புன்னகைத்தாள்.
எங்களுக்காக பூத்த புதிய உலகம்
வானம் நீல வண்ணஆடை கட்டி தூரத்தில் முந்தானையை காயவிட்டிருந்தது
முந்தானையில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தது - சூரியன்.
கைகள் கோர்த்தபடி மெய்மறந்து நடந்தோம்.
இருவரும் உணர்ந்து நின்றோம்
நாங்கள் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது.
கண்கள் பார்த்துக்கொண்டு நின்றோம்
அவள் கண்களில் மீண்டும் முத்துக்குவியல் அரும்பியது
அவள் கரங்களில் இதழ் பதிக்க ஆசையாய் கைகளை தூக்கினேன்
கண்கள் மூடி மனதுக்குள்ளே முத்தமிட்டேன்
வெளிவர துடித்த அழுகையை கைகளால் அடைத்துக்கொண்டு
என்னை விட்டுச் சென்றுகொண்டிருந்தாள்
அவள் உருவம் நிழலாய் கண்களில் இருந்து
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்
அவள் சிறு புள்ளியாய் தேய்ந்து கொண்டிருந்தாள்
புள்ளியாய் கண்ணீர் பிறந்தது.....
பச்சை கம்பளமாய் பாதங்களுக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க.
சொர்கம் சொக்கிப் போகும்
கொஞ்சம் இளைப்பாற இடம் கேட்க்கும்
அழகுக்கு நாங்கள் அஸ்திவாரம் இப்படி கர்வமாக நிமிர்ந்திருந்த
பூக்காட்டுக்குள் மொனத்தை மொழியாக்கி நடந்து சென்றோம்..
முத்துச் சிப்பிக்குளிருந்து முத்துக்கள் சிரித்தது சின்னதாக.
ஆம் - அவள் சின்னதாக புன்னகைத்து கூறினாள்
அங்கே அமரலாம்.
யாரோ ஒரு கலைஞ்னின் கவித்துவமான படைப்பில்
உருவாகி இருந்தது அந்த சிறிய நீரூற்று.
வெள்ளை தாவணி போர்த்திக் கொண்டு
அழகாக நீராடிக் கொண்டிருந்தது அந்த நீரோடை
பொன்னிறமான இளவம்பஞ்சு பாதங்களை
நீரோடை முத்தமிட அமர்ந்தாள் - அருகில் நானும்
அழகாக ரசித்துக்கொண்டிருந்தது அந்த நிலவு - நீரோடையை.
ஆம் அவள்தான் - நானும் ரசித்துக்கொண்டிருந்தேன்
என்னவளை - ஆம் நிலவை.
சற்று முகம் திருப்பி புன்னகைத்து கேட்டாள் "என்ன?"
உதடுகள் பிரியாமல் கண்களால் கேட்ட கேள்விக்கு - பதில்
உதடுகள் பிரித்து நான் மட்டும் முத்தமிடும் இப்பாதங்களை
நீரோடை முத்தமிடுகிறது, பூக்கள் அனைத்தும் உன் அழகை தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருந்ததால் இன்று முதல் எதிரியாகி விட்டார்கள்
என்று சொல்ல நினைத்து ஒன்றும் சொல்லாமல்
கண்களால் பதில் கூறினேன் - ஒன்றும் இல்லை.
ஆர்பாட்டம் இல்லாமல் அழகாக ஓடும் ஓடை
சுதந்திரம் எங்களுக்கு மட்டுமே சொந்தம்
என்று சொல்லித் திரியும் மீன் கூட்டங்கள்.
ஜதி போட தெரியும் என்று
சலசலத்து ஓடும் தண்ணீர்
இயற்கை தீட்டிய உயிர் கொண்ட ஓவியமாய்
தென்றலின் தாலாட்டுக்கு தகதிமியாடும்
வண்ணமிகு மலர்த்தோட்டம்
இயற்கை தேவனை ஆசானாக கொண்டு
கற்றுக் கொண்ட பாடலை
மரங்களின் சலசலப்பு பக்கவாத்தியங்கள் முழங்க
மெய்மறந்து பாடிக்கொண்டிருக்கும் குயில்.
இப்படியே சொல்லிக் கொண்டே சென்றவள்
உனக்கு பிடித்திருகிறதா என்றாள்
மெதுவாக அவள் கண்ணங்களை தொட்டு திருப்பினேன்
இவைகளில் ஒன்றைகூட என் மனம் ரசிக்க மறுக்கிறது
இவை அனைத்திற்கும் குத்தகை எடுத்தாற்போல்
நீ என் அருகில் இருக்கும்போது உன்னையன்றி
நான் எவற்றை ரசிக்க மனம் கொடுப்பேன்.
காலைப் பனித்துளி காய்ச்சல் கொண்டு வழிவதுபோல
அவள் ஊதாப்பூ கண்களில் இருந்து கண்ணீர்
கொப்பளித்து வழிந்தது.
கண்ணீர் சிந்திய முத்துக்களை கையேந்தி கைப்பற்ற
என் இதயத்தில் எரிமலை எரிச்சல் - கண்ணீர் வெப்பம் தாங்காமல்
அவள் தேன்குரல் தழுதழுத்து தடங்கலாய் கூறியது
எனக்கு என் காதலை ஆசையை அன்பை
சொல்லத் தெரியவில்லை என்று.
சொன்னபடியே தன் பிஞ்சு விரல்களால் என் கரங்களை பற்றி
என் கண்ணீர் துளிகளை கேட்டுப்பார் அது சொல்லும் என் காதலை அன்பை
என்றபடி கரங்களுக்கிடையே முகம் புதைந்தாள்
வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தேன் கண்ணீர் துடைக்க
மௌனம் இதையன்றி வேறொன்றும் தோன்றவில்லை
நிமிடங்கள் நிசப்தமாய் கரைய
மெதுவாக என் பௌர்ணமி நிலா முகம் காட்டியது
வேறொன்றும் பேசாமல் புன்னகைத்தேன்
என் புன்னகை பிறவிப்பயன் பெற்றது
ஆம் - அவளும் புன்னகைத்தாள்.
எங்களுக்காக பூத்த புதிய உலகம்
வானம் நீல வண்ணஆடை கட்டி தூரத்தில் முந்தானையை காயவிட்டிருந்தது
முந்தானையில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தது - சூரியன்.
கைகள் கோர்த்தபடி மெய்மறந்து நடந்தோம்.
இருவரும் உணர்ந்து நின்றோம்
நாங்கள் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது.
கண்கள் பார்த்துக்கொண்டு நின்றோம்
அவள் கண்களில் மீண்டும் முத்துக்குவியல் அரும்பியது
அவள் கரங்களில் இதழ் பதிக்க ஆசையாய் கைகளை தூக்கினேன்
கண்கள் மூடி மனதுக்குள்ளே முத்தமிட்டேன்
வெளிவர துடித்த அழுகையை கைகளால் அடைத்துக்கொண்டு
என்னை விட்டுச் சென்றுகொண்டிருந்தாள்
அவள் உருவம் நிழலாய் கண்களில் இருந்து
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்
அவள் சிறு புள்ளியாய் தேய்ந்து கொண்டிருந்தாள்
புள்ளியாய் கண்ணீர் பிறந்தது.....