என் தேவதை

எண்ணங்கள்
எண்ணிக்கை இல்லாமல்
சிதறிக் கிடக்க

நினைவுகளில்
நிலை நிறுத்தி
சிந்தையில் கிடத்தி

கற்பனைக்
கவிதைகளை காதலுடன்
சிலவற்றை எழுத

எழுதுகோல்
எடுத்து சிக்கலாய் கிறுக்கினேன்
ஒற்றை வரி கவிதை,
என் தேவதையின் பெயர்.

முரண்பாடு

எங்கள் ஜனனம்
சூரிய அஸ்தமனத்தில்
"அல்லி பூக்கள்"

பௌர்ணமி

வளர்ந்த
பின்னும்
ஆடையின்றி
அலைவது
ஏன்?

நிலா

மேகமே
என்னை
மறைத்துக் கொள்.
என்
நிர்வாணத்தை
உலகம்
பார்கிறது
"நிலா"

சில நிமிட சொர்க்கம்

சில நிமிட சொர்க்கம் என் அருகில்
நீ பார்த்த அந்த ஒரு நொடி.

இதழ் இழைந்தால்

ரணமானது இதயம்
உன் கடைக்கண் கல்வீச்சால்.
நிச்சயமாக குணமாகும்
உன் இதழ் இழைந்தால்.

புரியும்வரை..தெரியும் வரை



நடக்க தெரிந்த கால்களுக்கு
இலக்கு தெரியவில்லை
இது என்று தெரியாமல்
எதையோ குழப்பும் - மனம்
நினைவுகளின் கோபுரம்
இருந்தும் தெளிவில்லாமல்
எதை நினைத்து எழுதுகோல் பிடித்தேன்.
சிந்தனை தெளிவில்லாமல்
எதையோ எழுத நினைத்து
எதையோ எழுதி கொண்டு
அதிலும் ஒன்றிப் போகாமல்
எழுதுவதை நிறுத்தி விட்டு
எழுதியதை வாசித்தேன்
புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றேன்
புரிந்து கொள்ள ஆவலாய்.
புரியும்வரை..
தெரியும் வரை...
எழுதிக் கொண்டிருப்பேன்.

கனவு...



கார்முகில் படகை
மின்னல் துடுப்பு கொண்டு
வானில் அலை மோத
விண்மீன்களின் நடுவே பயணம்
கண் கண்ட இடமெல்லாம்
நட்சதிரங்களின் சிரிப்பு
நிலவை இலக்காக கொண்டு
இருளை துனையாக்கி முன்னேற்றம்
எங்கும் கோள்களின் நாட்டியம்
ஒன்றுடன் ஒன்று கைகோர்காமல்
நிச்சயமாக தெரியவில்லை எப்பொழுது
இறங்கினேன் நிலவில் என்று.