அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
இன்றும் அழுது கொண்டிருக்கிறேன்
மின்மினி மின்னல்களை நினைத்து
காதல்- கேள்விகள்...

கேள்விகள் உண்டு...
அதனால்..
கவனமாய் படியுங்கள்...
காதல் ஒரு மனிதனுக்கு...
எத்தனை முறை வரும்?
அல்லது வரவேண்டும்?
எப்படி வரவேண்டும்?
ஏன் வரவேண்டும்?
எங்கு வரவேண்டும்?
எதற்கு வரவேண்டும்?
எப்பொழுதெல்லாம் வரவேண்டும்?
எனக்கு ஒரு முறை மட்டுமே வந்தது...
என்னுயிர் காதலிக்கு?
யாராவது...
இதைப் படிக்கும் யாராவது...
நீங்கள்...
வழக்கறிஞரா? வாத்தியாரா? ...
பொறியாளரா? மருத்துவரா?...
கலைஞரா? இல்லை கவிஞரா?...
யாராவது... யாராவது...
சரியான விடையைச் சொல்லுங்களேன்...
காத்திருக்கிறேன்...
( நன்றி - அனாமிகா பிரித்திமா )
அதனால்..
கவனமாய் படியுங்கள்...
காதல் ஒரு மனிதனுக்கு...
எத்தனை முறை வரும்?
அல்லது வரவேண்டும்?
எப்படி வரவேண்டும்?
ஏன் வரவேண்டும்?
எங்கு வரவேண்டும்?
எதற்கு வரவேண்டும்?
எப்பொழுதெல்லாம் வரவேண்டும்?
எனக்கு ஒரு முறை மட்டுமே வந்தது...
என்னுயிர் காதலிக்கு?
யாராவது...
இதைப் படிக்கும் யாராவது...
நீங்கள்...
வழக்கறிஞரா? வாத்தியாரா? ...
பொறியாளரா? மருத்துவரா?...
கலைஞரா? இல்லை கவிஞரா?...
யாராவது... யாராவது...
சரியான விடையைச் சொல்லுங்களேன்...
காத்திருக்கிறேன்...
( நன்றி - அனாமிகா பிரித்திமா )
காதலை மட்டுமல்ல...
என்னை உலுக்கிய ஒவ்வொரு கணமும் இன்னும் இருக்கின்றன,
காதலை மட்டுமல்ல...
உங்களின் அத்தனை உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வாழப் பிடிப்பதற்கு அதுவேதான் ஆதாரம்.
காயங்கள், இழப்புகள், பிரிவுகள்... யாருக்கு இல்லையென்று சொல்லுங்கள்?
பூக்கள் எவ்வளவு மலர்ந்து உதிர்ந்தாலும்... வாசம் உண்டு.
மேகங்கள் எத்தனை கடந்து போனாலும்... வானம் உண்டு.
காதலை மட்டுமல்ல...
உங்களின் அத்தனை உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வாழப் பிடிப்பதற்கு அதுவேதான் ஆதாரம்.
காயங்கள், இழப்புகள், பிரிவுகள்... யாருக்கு இல்லையென்று சொல்லுங்கள்?
பூக்கள் எவ்வளவு மலர்ந்து உதிர்ந்தாலும்... வாசம் உண்டு.
மேகங்கள் எத்தனை கடந்து போனாலும்... வானம் உண்டு.
கெண்டை விழிகள்
அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் .
நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் .
இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை.
அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல்
அப்படியே மாறாமல் இருக்க வேண்டுமென்பதற்காக,
நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.
நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் .
இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை.
அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல்
அப்படியே மாறாமல் இருக்க வேண்டுமென்பதற்காக,
நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.
Subscribe to:
Posts (Atom)