வரம் கேட்கிறேன்

உன்னை
நினைக்கும்
பொழுதெல்லாம்
இதயம்
துடிதுடிக்கிறது.
என்
இதயத்தில்
வாழும்
உனக்கு
வலிக்கக்கூடாது
என்பதற்காக
வரம்
கேட்கிறேன்
கடவுளிடம்
இதயம்
நின்றுபோக.

துடைத்துவிட வருகிறேன்

என்
இதயத்தை
கசக்கிக்
கொண்டிருப்பவளே.
ரத்தக்கறை
படிந்தால்
சொல்லியனுப்பு
துடைத்துவிட
வருகிறேன்.

கண்ணீர் பூ


பூக்களும்
கண்ணீர் சிந்தும்
அன்பே - நீ
அழுத போது
தெரிந்து கொண்டேன்.