இதுதான் காதலா?

புரியவில்லை
தெரியவில்லை
குழப்பம்
ஓ...
இதுதான் காதலா?

யார் சொல்வது?

காதல்
என்னை
ஏமாற்றி விட்டது
யார் சொல்வது?
கவிதை
கற்றுத் தந்துள்ளது.

இப்படியா!!!?

அவள் முகம்
பௌர்ணமி நிலா
மறுபக்கம்?
இப்படியா!!!?

பறித்துச் சென்றாள்

எனக்கு
சொந்தமென்று சொல்ல
இதயம்கூட இல்லை.
அதையும் அவள்
பறித்துச் சென்றுவிட்டாள்.

காதலோடு புன்னகைத்திருந்தாள்

காதலோடு புன்னகைத்திருந்தாள்
அன்பே, கண்டங்களோடு
கிரகங்களையும் வென்றிருப்பேன்.
காதலால், உன் கண்ணீர்
காண முடியாமல்
வாளெடுத்து வென்றுவிட
இது கண்டங்கள் அல்ல - காதல்
என்று கூறி திரும்புகையில்
கண்களில் நின்ற நிஜங்கள்
சருகுகளாய் வீதியெங்கும்
இறைந்து கிடக்கிறது

பொய் - உன்மை


அன்பு
காதல்
பாசம்
அனைத்தும் பொய்.
இவைகளால் ஏற்படும்
வலி
வேதனை
மட்டுமே உன்மை.