எனக்கான முகமூடி

கனவு மூட்டைகளை சுமந்துகொண்டு
நீண்டதொரு பயணம், ஏதும் இலக்கின்றி.
சாலையெங்கும் சுற்றித்திரிந்தன மனிதஉடல்கள்
பல வண்ணங்களில் மனித முகங்கள் .
நாற்றமெடுத்து அழியபோகும் சதைபிண்டங்களை
தூக்கிச்செல்லும் பிணங்களோடு சந்திப்புகள்.
சந்திப்புகள் சிலதூரங்களில் பாதை மாறின.
ஏன்? என்ற கேள்வியோடு பயணத்தடை.
பதிலன்றி பயணம் தொடர அச்சம்.
தெரிந்துகொள்ள முயற்சித்து அதிர்ச்சி.
அனைத்தும் முகமூடி போர்த்தியவை.
புரிந்து கொண்டேன் முகமூடியின் அவசியத்தை.
பகட்டான முகமூடியின்றி பயணத்தை தொடரமுடியாது.
எங்கே எனக்கான முகமூடி?

நொறுங்கிவிட தாமதமில்லை .

கெஞ்சலான இரவு,
கிறக்கமான நட்சத்திரம்,
பருவமடைந்த நிலா,
வானத்திலோர் புரவி
செந்நிற புரவி
வெண்ணிறஆடை தேவதை
தென்றலாய் தவழ்ந்தாள்
புரவி மேலிருந்து.
தலைகோதி அருகிலமர்ந்தாள்
மெல்ல கரம்பிடித்தாள்.
எங்கோ பறந்தோம்
பிரபஞ்சத்தின் நடுவே
ஓர் மஞ்சம்
மஞ்சத்தில் தஞ்சம்.
காமம் கரைபுரளும்
கருவிழி கண்கள்
சில்லென்ற முத்தம்
உடல்முழுதும் தீமூட்டியது
தீயணைக்க அணைத்தாள்
பூச்சர கைகளில்
இரும்பொத்த வலிமை
அக்கணமே நொறுங்கிவிட
நொடியேதும் தாமதமில்லை .